எனது 'நண்பர்' மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர்

மோடி இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவை மீண்டும் தொடங்கியுள்ளார் என்று நஃப்தாலி பென்னட் கூறினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2022, 05:27 PM IST
எனது 'நண்பர்' மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர் title=

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ஏப்ரல் 2ம் தேதி, இந்தியாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இந்தியா இஸ்ரேல் இடையேயான உறவின் 30வது ஆண்டு விழாவையொட்டி, இந்த பயணம் நடக்கிறது. 

தனது பயணத்தின் போது, ​​பென்னட் பிரதமர் மோடி மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகளை சந்திப்பதோடு, இந்தியாவில்  உள்ள யூத சமூகத்தினரையும் சந்திப்பார்.

இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தும். இந்தப் பயணத்தின் நோக்கம் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதும், வலுப்படுத்துவதும் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதும் ஆகும். புத்தாக்கம், பொருளாதாரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விவசாயம் மற்றும் பல உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பென்னட் மற்றும் மோடி விவாதிப்பார்கள்.

மேலும் படிக்க | ‘ஹிஜாப் ’ தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு!
 

“எனது நண்பரான பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு எனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நாங்கள் ஒன்றாக இணைந்து  இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம். மோடி இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை மீண்டும் தொடங்கினார்.  இரண்டு நாடுகளின் தனித்துவமான கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகள் - இந்திய கலாச்சாரம் மற்றும் யூத கலாச்சாரம் - ஆழமானவை” என்று பென்னட் கூறினார்.

மேலும் படிக்க | இந்தியா வேகமாக வளர வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு..!

"இந்தியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, இதைத்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம். புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் வரை மற்ற பகுதிகளுக்கும் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த அக்டோபரில் கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் (COP26) போது,  இரு தலைவர்களும் முதன்முதலில் சந்தித்தனர். அங்கு பிரதமர் மோடி பென்னட்டை நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள அழைத்திருந்தார்.

மேலும் படிக்க | காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News