புல்வாமா என்கவுண்டர்: பாதுகப்புபடையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகபுப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதில்கள் சுட்டுக்கொலை..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2018, 09:44 AM IST
புல்வாமா என்கவுண்டர்: பாதுகப்புபடையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை... title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகபுப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதில்கள் சுட்டுக்கொலை..! 

ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் உள்ள திகுன் என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் கிராமத்தை சுற்றி வளைத்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News