இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக ஜகதிஷ் சிங் கெஹர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் இன்றுகாலை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Last Updated : Jan 4, 2017, 10:15 AM IST
இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் பதவியேற்பு title=

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக ஜகதிஷ் சிங் கெஹர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் இன்றுகாலை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தியாவின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டின் 44-வது தலைமை நீதிபதியாக கொலிஜீயத்தால் நியமிக்கப்பட்ட ஜகதிஷ் சிங் கெஹர் இன்று காலை டெல்லி ரைசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவருக்கு ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Trending News