மாயவதி: சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்தால் பி.ஜே.பி.க்குதான் சாதகமாக அமையும்

உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைந்தால் பாஜகவுக்கே சாதகமான அமையும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

Last Updated : Nov 6, 2016, 10:54 AM IST
மாயவதி: சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்தால் பி.ஜே.பி.க்குதான் சாதகமாக அமையும் title=

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைந்தால் பாஜகவுக்கே சாதகமான அமையும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். 

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி தொடங்கிய 25-வது வருடத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று உ.பி., யில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தேவேகவுடா, லாலு உள்ளிட்ட தலைவர்களை முலாயம் சிங் அழைத்திருந்தார்.

பீகார் தேர்தலை போல் பா.ஜனதாவிற்கு எதிராக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று லாலு கூறினார். இதனால் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க சமாஜ்வாடி கட்சி பீகார் மாநிலத்தை போல் மிக பிரமாண்ட கூட்டணியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் பா.ஜனதாவிற்கு நேரடி பலமா=க அமைந்துவிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எச்சரித்துள்ளார். மேலும், சமாஜ்வாடி கட்சியின் பெரிய கூட்டணி அமைக்கும் முயற்சிகள், அந்த கட்சியின் தோல்வியை சட்டசபை தேர்தலுக்கு முன்பே ஒத்துக் கொள்வதை நிரூபித்துள்ளது என்றார்.

Trending News