வேட்பு மனு தாக்கலுக்கு முன் மாபெரும் பேரணி நடத்தும் மோடி...

வாரணாசியில் இன்று மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Apr 25, 2019, 07:13 AM IST
வேட்பு மனு தாக்கலுக்கு முன் மாபெரும்  பேரணி நடத்தும் மோடி... title=

வாரணாசியில் இன்று மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற்று வருகிறது. பாஜக-வின் முக்கிய வேட்பாளராக கருதப்படும் பிரதமர் மோடி, உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் வரும் மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் மோடி, அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

பேரணியில் சாலை வழியாக சென்று மக்களை சந்திக்கும் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று பிற்பகல் 2 மணியளவில் வாரணாசி வந்தடையும் பிரதமர் மோடி, கால பைரவா கோவில் துவங்கி தனது பேரணியை துவங்கவுள்ளார். மோடியின் இந்து பேரணியில் 150-க்கு மேற்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மண்டப்புரா மற்றும் சோனப்புரா பகுதிகளும் அடங்கும்.

நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News