கிறிஸ்தவ மதமாற்ற பின்னணியில் அன்னை தெரசா - பாஜக எம்.பி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

Last Updated : Jun 21, 2016, 11:47 AM IST
கிறிஸ்தவ மதமாற்ற பின்னணியில் அன்னை தெரசா - பாஜக எம்.பி ஆதித்யநாத் குற்றச்சாட்டு title=

இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்கும் சதி திட்டத்தின் பின்னணியில் அன்னை தெரசா இருந்ததாக கூறி பாரதிய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராமகதை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளை கிறிஸ்தவ மயமாக்க அன்னை தெரசா முயன்றார். இதன் விளைவாக வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதம் வளர்ந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் மதமாற்றம் நடத்தி இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்ட ரோமில் உள்ள கிறிஸ்தவ தலைமை திட்டமிட்டதாகவும், அதன் காரணமாக தற்போது வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமானோர் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார். 

பாரதிய ஜனதா எம்பி-ன் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்னை தெரசா நிறுவிய மிஷினரி ஆஃப் சேரிட்டிஸ் நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமூக சேவை மற்றும் உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை பாஜகவினர் திட்டமிட்டு இழிவுபடுத்தவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Trending News