மகளை பலாத்காரம் செய்ய உடந்தையாய் இருந்த தாய்! தில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2023, 08:11 AM IST
  • முழுச் சம்பவத்தையும் தனது தாத்தாவிடம் கூற, பிறகுதான் விஷயம் காவல்துறைக்கு எட்டியது.
  • அடிக்கடி தனது தாயார் இரவில் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார்.
  • புகார் அளித்தாலோ அல்லது தப்பிக்க நில்னைத்தாலோ, கொலை செய்யப்படுவாய் என மிரட்டலும் விடுக்கப்பட்டது.
மகளை பலாத்காரம் செய்ய உடந்தையாய் இருந்த தாய்! தில்லியில் அதிர்ச்சி சம்பவம்! title=

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹோட்டலுக்கு தன்னை அழைத்துச் சென்றது தனது தாயார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது தாய் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது கூட்டுப் பலாத்காரம், போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலில் தனக்குத் தெரிந்த இளைஞரை தனது தாய் அறிமுகப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த வாலிபர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கெல்லாம் தனது தாயார் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவியாக இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார். இதுமட்டுமின்றி, புகார் அளித்தாலோ அல்லது தப்பிக்க நில்னைத்தாலோ, கொலை செய்யப்படுவாய் என மிரட்டலும் விடுக்கப்பட்டது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்த முழுச் சம்பவத்தையும் தனது தாத்தாவிடம் கூற, பிறகுதான் விஷயம் காவல்துறைக்கு எட்டியது.

ஷூட்டிங் நடக்கிறது  என்று கூறி  ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற தாய்

வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர குற்றம் சாட்டப்பட்ட இளைஞரையும் தேடி வருகின்றனர். புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்துடன் நியூ அசோக் நகரில் வசித்து வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தனது தாயார் டிவி தொடர்பான சில வேலைகளில் இருப்பதாகவும், அடிக்கடி தனது தாயார் இரவில் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார். கடந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, அவரை ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

மேலும் படிக்க | காதலியுடன் போனில் பேசிய நண்பன்... ஆணுறுப்பை வெட்டி கொடூர கொலை!

குற்றம் சாட்டப்பட்டவர் இரவில் வந்தபோது, ​​​​அவரது தாய் யாரோ மாமா  என்று ஒருவர் இருப்பதாக கூறினார். இரவில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது அறையில் தங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர், பெண்ணை இரவில் பாலியல் பலாத்காரம் செய்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவருக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்த அவரது, வாயில் துணியை திணித்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் படிக்க | சப்பாத்தி மாவு பேக்கெட்டில் கஞ்சா கடத்திய கணவன் - மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறை!

மேலும் படிக்க | Adani Group: பங்குச்சந்தையில் 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு? அதானி பங்குவிலை சரியானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News