ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

Last Updated : Jun 6, 2016, 08:35 AM IST
ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். title=

ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜனுக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் மூலமாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ரகுராம் ராஜனைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விசியம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது.

ராஜனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க வலியுறுத்தி ஆன்லைனில் சேஞ்ச்.ஓஆர்ஜி நிறுவனம் கையெழுத்து ஆதரவு நடத்தியது. இதில் 60 ஆயிரம் பேர் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பலாரியா என்பவர் மேற்கொண்ட ஆன்லைன் கையெழுத்து மனுவில் இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கக் கூடாது என்று கூறப்பட்ட மற்றொரு ஆன்லைன் மனுவில் 15 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.

Trending News