சவுதி அரேபியா இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த பங்குதாரர்: பிரதமர் மோடி புகழாரம்

இளவரசர் முகமது பின் சல்மான் உடனான சந்திப்பிற்கு பிறகு சவுதி அரேபியா எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2019, 03:35 PM IST
சவுதி அரேபியா இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த பங்குதாரர்: பிரதமர் மோடி புகழாரம் title=

புதுடில்லி: அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியும் உடன் இருந்தனர். 

பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஊடகங்களில் உரையாற்றி பிரதமர் மோடி கூறியாதவது: 

சவுதி அரேபியா எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இரு நாடுகளுக்கும் பல ஆண்டுகளாக உறவு இருப்பதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடு, எரிசக்தி மற்றும் வியாபார துறையில் விரிவாக்கம் விரிவடைந்துள்ளது. அவர் சவூதி அரேபியா குடிமக்களுக்கு இ-விசா சேவையை அறிவித்தார். 

உரையின் நடுவில் பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் குறித்து பாக்கிஸ்தான் தாக்கி பேசினார். பயங்கரவாததுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் மீது உலக நாடுகள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். சவுதி அரேபியா மற்றும் இந்தியாவும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் மீது அழுத்தம் அதிகரிக்கும் ஒப்புக்கொண்டுள்ளோம். 

Trending News