அரசியலை விட்டு வெளியேற தயார்; முதல்வர் மகன் அதிரடி முடிவு!

தெலங்கான சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோற்கடிக்கப்பட்டால், அரசியலில் இருந்தே விலகுவதாக அவரது மகன் கே.டி.ராம ராவ் தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2018, 01:04 PM IST
அரசியலை விட்டு வெளியேற தயார்; முதல்வர் மகன் அதிரடி முடிவு! title=

தெலங்கான சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோற்கடிக்கப்பட்டால், அரசியலில் இருந்தே விலகுவதாக அவரது மகன் கே.டி.ராம ராவ் தெரிவித்துள்ளார்!

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் அவரது மகனும், அமைச்சருமான கே.டி.ராம ராவ் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். இச்சந்திப்பின் போது வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவு நாளான டிசம்பர் 11-ஆம் நாள் நான் அரசியலில் தொடருவதா, இல்லை சன்னியாசம் செல்வதா என முடிவு செய்யும் நாள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தெலங்கானா சட்டமன்ற தேர்தலில், ராஷ்ட்ரிய சமிதி கட்சி தோற்கடிக்கப்பட்டால், அரசியலில் சந்நியாசம் மேற்கொள்ளத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 15 ஆண்டுகளுக்கு சந்திரசேகர ராவின் ஆட்சியே தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினை தோற்கடிக்கும் நோக்கில், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதேவேலையில் பாஜக தனித்து தேர்தல் களத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்தச் சூழலில், ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி வாக்குசிதைவால் சிதைந்து போகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஷ்ட்ரிய சமிதி அமைச்சர் கே.டி.ராம ராவ் இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ராஷ்ட்டிரிய சமிதி கட்சியைக் காட்டிலும், தெலங்கானாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்லும் கட்சிகள் வேறில்லை என தெரிவித்த அவர் வரும் டிசம்பர் 11-ஆம் தேர்தல் முடிவ நாள் மட்டும் அல்ல, அரசியலில் நான் சந்நியாசம் செல்ல வேண்டுமா, இல்லை அரசியலில் தொடர வேண்டுமா என்பதையும் முடிவு செய்யும் நாள் என தெரிவித்துள்ளார். ஒருவேலை நான் போட்டியிடும் ஸ்ரீசில்லா தொகுதியில் வெற்றி பெற்றாலும், ராஷ்ட்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் விவரம்...

  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 
  • நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 
  • நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
  • டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
  • டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

Trending News