சபரிமலை: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட்

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 13, 2019, 01:48 PM IST
சபரிமலை: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட்  title=

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதால், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அரசும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

அதோடு சபரிமலைக்கு வர விரும்பும் பெண்கள் உச்சநீதிமன்றத்தின் அனுமதி கடிதத்தை கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக வந்த சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த பிந்து என்பரும் திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் பிந்துவின் முகத்தில் பக்தர் ஒருவர் மிளகு தூள் ஸ்பிரே அடித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என பிந்து அம்மினி , ரெஹானா பாத்திமா ஆகியோர் சார்பில்  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

 சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது. சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும்.

என உத்தரவிட்டார்.

Trending News