ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: அருண்ஜேட்லி அறிவிப்பு

இன்று டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 33_வது கூட்டம் நடைபெற்றது. அதில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2019, 07:14 PM IST
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: அருண்ஜேட்லி அறிவிப்பு title=

இன்று தலைநகரம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 33_வது கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் வீடுகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அதுக்குறித்து இறுதி முடிவு வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது. 

அனைத்து மாநிலங்களில் தொழில்முனைவோரும், வர்த்தகர்களும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் அவகாசம் 20 ஆம் தேதியில் இருந்து வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதன்மூலம் இரண்டு நாள் அவகாசம் கிடைத்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வரை ஜிஎஸ்டி ஆர் 3பி படிவங்களை சமர்ப்பிக்கலாம். 

அதேபோல ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு வரும் 28 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Trending News