ஆட்சி அமைக்க ஆளுநர் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றத்தில் Shiv Sena மனுதாக்கல்

ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) ஆட்சி அமைக்க நிராகரித்துள்ளதால், சிவசேனா கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2019, 04:29 PM IST
ஆட்சி அமைக்க ஆளுநர் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றத்தில் Shiv Sena மனுதாக்கல் title=

16:06 12-11-2019
ஆளுநர் அவசர அவசரமாக செயல்பட்டு உள்ளார் என சிவசேனா குற்றசாட்டி உள்ளது. மாநிலத்தில் ஜனாதிபதி விதிகளை அமல் படுத்துவதாக கூறப்படும் மகாராஷ்டிரா ஆளுநரின் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆளுநரின் இந்த முடிவு தன்னிச்சையான, அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட, நியாயமற்ற செயல் என சிவசேனா தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 


16:05 12-11-2019
ஆளுநர் கால நீட்டிப்பு வழங்க மறுத்ததற்கு எதிராக சிவசேனா தரப்பில் மனு தாக்கல். அவசர வழக்கான விசாரிக்க கோரிக்கை


மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி நேற்று உரிமைக் கூறியது. ஆனால் அவர்களின் கோரிக்கைகளை, அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) நிராகரித்தார். இதனையடுத்து சிவசேனா கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில் ஆட்சி அமைக்கவும், தங்கள் பெரும்பான்மையை நிருபிக்க கால அவகாசம் மாநில ஆளுநர் தரவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை (The Present Role) அமல் படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முக்கியமான கூட்டம் மகாராஷ்டிராவில் (Maharashtra) இன்று நடைபெறுகிறது. சிவசேனாவை (Shiv Sena) ஆதரிப்பது தொடர்பான பிரச்சினையில் காங்கிரசுக்கும் என்சிபி இடையிலான தாமதத்தால், மகாராஷ்டிரா ஆளுநர் தரப்பில் இருந்து ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைக்கப் பட்டது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றது. முந்தைய சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிந்தது. முன்னதாக நேற்று, ஆளுநர் இன்று இரவு 8.30 மணி வரை ஆதரவைத் திரட்ட பாஜக மற்றும் சிவசேனாவுக்கு நேரம் வழங்கியுள்ளார். ஆனால் நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு நிலையான அரசாங்கத்தை மாநிலத்தில் அமைப்பதற்கு ஆதரவாக இல்லை என்று ஆளுநர் கருதுவதால், அதனால் ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதியின் ஆட்சி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தனது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று பிரதமர் மோடி பிற்பகல் பிரேசில் செல்ல உள்ளார். அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அக்டோபர் 24 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 19 நாட்களுகள் ஆகியும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. 

மகாராஷ்டிரா தேர்தலுக்கு முந்தைய பாஜக - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் சிவசேனாவின் 50-50 சூத்திரத்திற்கான கோரிக்கையின் காரணமாக இந்த கூட்டணி இறுதியில் முறிந்தது. அதன் பிறகு சிவசேனா என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடைசி தருணம் வரை காங்கிரஸின் ஆதரவு குறித்த குழப்பம் காரணமாக ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஆளுநர் பி.எஸ். கோஷ்யரி திங்கள்கிழமை மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க அழைத்தார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் ஊடகவியலாளர்களிடம், "ஆளுநர் எங்களை அழைத்தார், எங்களுக்கு ஒரு அழைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. நாளை காங்கிரஸுடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முறைகள் குறித்து விவாதிப்போம்" என்று கூறினார்.

நேற்று மாலை ராஜ் பவனுக்கு சென்ற சிவசேனா கட்சி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமைக் கூறியது. மேலும் பதவியேற்க 48 மணிநேர கால நீட்டிப்பைக் கோரியது. ஆனால் அவர்களின் கோரிக்கைகளை, அம்மாநில ஆளுநர் பகத் சிங் (Bhagat Singh Koshyari) நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News