ராகுல் காந்தி ராஜினாமா! எமோஷன் ஆன சிதம்பரம்!

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 26, 2019, 01:32 PM IST
ராகுல் காந்தி ராஜினாமா! எமோஷன் ஆன சிதம்பரம்! title=

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, உத்திர பிரதேசம், கர்நாடக, ஒடிசா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். 

அந்தவகையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கான கடிதத்தை ராகுல் காந்தி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஏற்க மறுத்து நிராகரித்தது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் ராகுலின் விலகலை விரும்ப வில்லை. இதனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பேசும்போது, ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் தொண்டர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கூறினார்.

Trending News