கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

2002 Gujarat Riot case : 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 24, 2022, 12:35 PM IST
  • 2002 குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு
  • பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
  • தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி title=

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், ரயிலில் பயணித்த 59 கர சேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மதக்கலவரம் வெடித்தது.

அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரக்காரர்களால் வெட்டி எரிக்கப்பட்டனர். மேலும், இந்தக் கலவரத்தில் 3 நாட்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். 

இந்தக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு ஏறத்தாழ கலவரம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ம் ஆண்டு தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி உள்ளிட்ட 63 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்

இந்தக் கலவரம், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய ஒரு பெரிய சதி என்றும், இது குறித்து புதிதாக விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் கலவரத்தில் போது உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எஹ்சன் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இம்மனு விசாரணைக்குத் தகுதியற்றது எனக் கூறித் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க | Coronavirus 4th Wave: வந்துவிட்டதா நான்காவது அலை; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News