காங்கிரஸ் வெளியிட்ட பாஜக ஊழல் பட்டியல் விளம்பரம்... விளக்கம் கோரும் தேர்தல் ஆணையம்!

கர்நாடகாவில்  தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால், ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 7, 2023, 10:22 AM IST
  • பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக முன்னின்று சூறாவளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
  • காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
  • கர்நாடகாவில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் வெளியிட்ட பாஜக ஊழல் பட்டியல் விளம்பரம்... விளக்கம் கோரும் தேர்தல் ஆணையம்! title=

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரபரப்புரை சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.  பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக முன்னின்று சூறாவளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் முக்கிய பகுதியாக  கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பிரம்மாண்ட சாலை பேரணி மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் 2019 மற்றும் 2023 க்கு இடையில் மாநிலத்தில் நடைபெற்ற 'Corruption Rate Card'  என்ற ஊழல் பட்டியல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. இந்நிலையில், கர்நாடகா பாஜகவின் ஊழல் குறித்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் தனது நோட்டீஸில், அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும் எனவும்,  காங்கிரஸ் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகிய பெற்றதற்கான சான்றுகள் அல்லது,  ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை மே மாதம் 7ம் தேதி மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் எனவும்  கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) தலைவரை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 

பாரதிய ஜனதா கட்சி (BJP) அளித்த புகாரின் பேரில் சனிக்கிழமை இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மாதிரி நடத்தை விதிகள் (MCC), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் விதிகளை மேற்கோள் காட்டி, ஊழல் விளம்பரம் மூலம் காங்கிரஸ் நடத்தை விதிமுறைகளை "மீறியுள்ளது" என்று கூறியது.

மேலும் படிக்க | தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

மே 7 ஆம் தேதி மாலை 7 மணிக்குள் ஆதாரங்களை பகிரத் தவறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளை மீறியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வேண்டும். எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தை விமர்சிப்பது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை என்றும், இந்திய தேர்தல் செயல்முறையின் கீழ் பல்வேறு அரசியல் நடிகர்களின் இன்றியமையாத செயல்பாடு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி , பெல்லாரி பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம், பயங்கரவாதத்தின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.  பயங்கரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது என ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும், பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு எந்தவித பாகுபாடுமின்றி மக்களுக்காக உழைத்துள்ளது என்றும் தெரிவித்தார். பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போராடும் தேர்தல் இது என்று பாதாமி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2023-ம் ஆண்டுக்கான கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அதற்கான களம் தயாராகிவிட்டது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி வாக்களிக்கும் அதே வேளையில், 224 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கான முடிவுகள் மே 13-ம் தேதி அறிவிக்கப்படும். பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜகவும் காங்கிரஸும் வாக்காளர்களைக் கவர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. மறுபுறம், ஜேடிஎஸ் தனது செல்வாக்கை மைசூர் பகுதிக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் பல்வேறு விதமாய் வந்துள்ளன. கருத்துக் கணிப்பு பகுப்பாய்வு சில கருத்துக் கணிப்புகளில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளன. எனவே தேர்தல் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News