தன்பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது பெரும் பாதிப்பை உண்டாக்கும்: NCPCR

ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்துள்ள நிலையில், ஒரே பாலின திருமண மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மனு தாக்கல் செய்தது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2023, 08:01 PM IST
  • தத்தெடுக்கப்படும், குழந்தையின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.
  • குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCRC) செப்டம்பர் 1990 இல் நடைமுறைக்கு வந்தது.
தன்பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது பெரும் பாதிப்பை உண்டாக்கும்: NCPCR title=

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கத் தொடங்கும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதே போல் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்த வழங்குகளை மாற்றி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், ஒரே பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது சமூக மற்றும் உளவியல் அம்சங்களில் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறி, ஒரே பாலின திருமண மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. NCPCR, மத்திய தத்தெடுப்பு வள ஆணைய வழிகாட்டுதல்கள் 2017 (CARA வழிகாட்டுதல்கள், 2017)  விதிகளை மேற்கோள் காட்டிய, அங்கு எந்த சூழ்நிலையிலும் தன் பாலின ஆண் தம்பதிகல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என NCPCR தெரிவித்துள்ளது. "ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிப்பது சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015  விதிகளுக்கு எதிரானது" என்று அது மேலும் கூறுகிறது.

"தத்தெடுக்கப்படும், குழந்தையின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஓரிரு பாலினத்தவர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தை சமூக மற்றும் உளவியல் அம்சங்களில் பெருமளவு பாதிக்கப்படுவட்தை பல மன நல ஆய்வுகள் கூறியுள்ளன"  என மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஒரே பாலின பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள்,  இதர குழந்தைகளை போல் அல்லாமல், குழம்பி போய் பாலின பாத்திரங்கள் மற்றும் பாலின அடையாளத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை பாதிக்கலாம் என்று குழந்தை உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என NCPCR உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கூறியது.

என்சிபிசிஆர் தனது மனுவில், குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCRC) செப்டம்பர் 1990 இல் நடைமுறைக்கு வந்தது என்றும் 195 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, இது உலகில் மிகவும் "பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தம்" ஆகும். "இருப்பினும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று UNCRC இல் குறிப்பிடப்படவில்லை" என்று குழந்தை உரிமைகள் அமைப்பு கூறியது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த அசத்தல் பலன் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News