இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாக். படையினர் 2 பலி

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டுள்ளன.

Last Updated : Dec 21, 2019, 05:31 PM IST
இந்திய ராணுவத்தின் பதிலடியில் பாக். படையினர் 2 பலி  title=

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார், பல்லன்வாலா ஆகிய இடங்களில் இன்று பாகிஸ்தான் படையினர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். இந்த இடங்களில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதில், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் சடலங்கள் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending News