பாஜக மூத்த தலைவர் மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார்!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக மூத்த தலைவர் ப்ரத்யுஷ் மானி திரிபாதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்!

Last Updated : Dec 4, 2018, 12:06 PM IST
பாஜக மூத்த தலைவர் மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார்! title=

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக மூத்த தலைவர் ப்ரத்யுஷ் மானி திரிபாதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்!

லக்னோவிற்கு உட்பட்ட பாதஷாநகர் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் ப்ரத்யுஷ் மானி திரிபாதி (வயது 34), நேற்றிரவு மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சாலை ஓரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் அருகில் இருந்த ஜார்ஜ் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி விடிற்காலை 3.00 மணியளவில் உயிர் இழந்துள்ளார்.

ப்ரத்யுஷ் மானி திரிபாதி தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 மர்ம நபர்கள் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் ப்ரத்யுஷ் மானி திரிபாதி தனது அண்டை வீட்டாருடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் கொல்லப்பட்டிருகலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ப்ரத்யுஷ் மானி திரிபாதியின் ஆதரவாளர்கள் நூற்று கணக்கானோர் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே காவல்துறையினருக்கு எதிரான கோஷங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறைய நாட்களுக்கு முன்னர் திரிபாதி தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறை நாடினார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் வேண்டுகோளுக்கு காவல்துறை செவிசாய்க்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திரிபாதி குடும்பத்தாரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், லக்னோ SSP கலாநிதி நெய்தானியினை உடனடியாக இடைநீக்கம் செய்யவேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read in ENGLISH

Trending News