உபி தேர்தல் 2017: 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Last Updated : Feb 15, 2017, 08:49 AM IST
உபி தேர்தல் 2017: 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! title=

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷரன்பூர், பிஜ்னோர், பரேலி, பிலிபிட், லகிம்புர் கெரி ஆகிய முக்கிய தொகுதிகள் இதில் அடக்கம். 

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 11-ம் துவங்கிய தேர்தல், மார்ச் 8-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச், 11-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ.க., பகுஜன் சமாஜ், காங்கிரஸ், உடன் கைகோர்த்துள்ள ஆளும் சமாஜ்வாடி ஆகிய அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 721 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 82 பெண்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் களம் காண்கின்றனர். 2 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

14,771 வாக்கு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

5 மாநிலங்களிலும் மார்ச் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Trending News