இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய சிறுவன் மரணம்... மொத்தம் குடும்பத்திற்கு பாதிப்பு - ஷாக் சம்பவம்

UP Shocking News: வீட்டில் சமைத்த நூடுல்ஸ் மற்றும் சாதத்தை சாப்பிட்டு இரவில் தூங்கிய சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், சில மணிநேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2024, 11:03 AM IST
  • குடும்பத்தினர் 6 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • அதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
  • மற்றொரு சிறுவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய சிறுவன் மரணம்... மொத்தம் குடும்பத்திற்கு பாதிப்பு - ஷாக் சம்பவம் title=

UP Shocking News: உத்தர பிரதேசத்தில் பிலிபித் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு (மே 10) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் வீட்டிலேயே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுள்ளனர். நூடுல்ஸ் உடன் சேர்த்து சாதமும் சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, அதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் வயிறு மிகவும் வலிப்பதாக கதறியுள்ளான். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டதை அடுத்து அவனை வீட்டுக்கும் அழைத்து வந்தனர். 

வீட்டுக்கு வந்த சில மணிநேரங்களிலேயே அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டான். சிறுவனுக்கு ஆரம்பத்தில் என்ன உடல்நல பாதிப்பு ஏற்பட்டதோ அதே பாதிப்புகள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த புரன்பூரின் ராகுல் நகரைச் சேர்ந்தவர் சீமா. 

சாதத்துடன் நூடுல்ஸ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் டேராடூனை சேர்ந்த சோனு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. சீமா அவர் புகுந்த வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை தனது மகன்கள் ரோஹன், விவேக் மற்றும் மகள் சந்தியா உடன் வந்துள்ளார். சீமா மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் வெள்ளிக்கிழமை இரவில் வீட்டில் சமைத்த நூடுல்ஸையும், சாதத்தையும் சாப்பிட்டு தூங்கச் சென்றுள்ளனர். 

மேலும் படிக்க |  'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்... பொது விவாதத்திற்கு நான் தயார்' - ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்

அன்றையே இரவு சீமாவுக்கும், அவரது மூன்று குழந்தைகளும், தங்கை சஞ்சு, அண்ணி சஞ்சனா ஆகியோர் உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தேறிய பிறகு வீடு திரும்பினர். சிறிதுநேரம் கழித்தும் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

விசாரணை தொடக்கம்

குறிப்பாக சீமாவின் மகன் ரோஹன் மருத்துவமனைக்கு சென்று வந்த பின்னரும் ஏற்பட்ட வயிறு வலி காரணமாக தண்ணீர் குடித்துவிட்டு படுத்துள்ளார். அதை அடுத்தே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினரும் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்தித்தனர். தொடர்ந்து சனிக்கிழமை காலையில் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், மேற்சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களின் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த மருத்துவமனைக்கு 5 பேர் அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர்கள் சாதத்துடன் நூடுல்ஸையும் இரவு உணவாக சாப்பிட்டதாக கூறினர் என்றும் புரன்பூர் சுகாதார மையத்தை மருத்துவர் ரஷித் கூறியுள்ளார். மேலும், அதில் ஒருவரின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை மட்டும் பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறினார். சீமாவின் மற்றொரு மகன் விவேக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்து. 

மேலும் படிக்க | 2 ஆண்களுடன் பாத்ரூமில் மனைவி... அடிதடியில் இறங்கிய டாக்டர் கணவன் - பகீர் சம்பவம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News