ஸ்வர்ணரேகா நதி: இது இந்தியாவின் ‘தங்கம்’ பாயும் நதி!

ஸ்வர்ணரேகா நதி: ஸ்வர்ணரேகா நதியில் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2022, 07:23 PM IST
  • ஸ்வர்ணரேகா நதியின் துணை நதியும் உள்ளது.
  • மக்கள் தங்கத்தைப் பிரித்தெடுக்கிறார்கள்.
  • தங்கம் உண்மையில் கர்காரி நதியிலிருந்தே வருகிறது என்றும் கூறப்படுகிறது.
ஸ்வர்ணரேகா நதி: இது இந்தியாவின் ‘தங்கம்’ பாயும் நதி! title=

ஸ்வர்ணரேகா நதி: இந்தியாவில் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய ஆறுகள் உள்ளன. அவை மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் தங்கம் பாயும் நதி ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆற்றின் அருகே வசிப்பவர்கள் தங்கத்தை பிரித்தெடுத்து விற்று பணம் சம்பாதிக்கின்றனர். இருப்பினும், ஆற்றில் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

ஜார்க்கண்டில் பாயும் நதி

இந்த தங்கம் பாயும் நதி ஜார்கண்ட் மாநிலத்தில் பாய்கிறது, அதன் பெயர் ஸ்வர்ணரேகா நதி. தங்கத்தை கொடுப்பதால், இந்த நதி ஸ்வர்ணரேகா நதி என்று அழைக்கப்படுகிறது. இது ஜார்கண்ட் தவிர மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாய்கிறது. இந்த நதியின் ஆரம்பம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நேரடியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 அக்டோபரில் முடிக்கப்படும்: மத்திய அரசு

மக்கள் காலை முதல் மாலை வரை தங்கத்தை பிரித்தெடுக்கின்றனர்

ஜார்கண்டில், சுவர்ணரேகா நதி செல்லும் பகுதியில், மக்கள் அதிகாலையில் இருந்து அங்கு வந்து மணலை சல்லடை போட்டு தங்கம் சேகரிக்கின்றனர். இதில் பல தலைமுறைகளாக தங்கம் பிரித்தெடுத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, ஆண், பெண் தவிர, குழந்தைகளும் ஆற்றில் இருந்து தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் தங்கம் எங்கிருந்து வருகிறது

ஸ்வர்ணரேகா நதியில் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இருப்பினும், சில புவியியலாளர்கள் சுபர்ணரேகா நதி பாறைகள் வழியாக வருவதாகவும், அதனால்தான் அதில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

துணை நதியிலும் தங்கம்

ஸ்வர்ணரேகா நதியின் துணை நதியும் உள்ளது. அதில் இருந்து மக்கள் தங்கத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். ஸ்வர்ணரேகா நதியின் துணை நதியான 'கர்காரி' என்னும் நதியின் மணலில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன. மக்கள் இங்கிருந்து தங்கத்தை பிரித்து எடுக்கிறார்கள். சுவர்ணரேகா நதியில் உள்ள தங்கம் உண்மையில் கர்காரி நதியிலிருந்தே வருகிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பழையவர்களை இறக்குவேன் புதியவர்களை ஏற்றுவேன் - அண்ணாமலை அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News