SP மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாம் கான் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவோம்!

உத்தரப் பிரதேசத்தில்  நாங்கள் வென்றால் அசாம் கான் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 15, 2019, 02:02 PM IST
SP மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசாம் கான் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவோம்! title=

உத்தரப் பிரதேசத்தில்  நாங்கள் வென்றால் அசாம் கான் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்!

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய MP, மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான அசாம் கான் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்; சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அசாம் கான் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். முலாயம் சிங் யாதவ் மீது ஒரு முறை இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அந்த நேரத்தில் நீதிமன்றம் எங்களுக்கு உதவியது "என்று அவர். ஆளுநர் ஆனந்திபென் படேலுடன் இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்வேன் என்றும் எஸ்பி தலைவர் கூறினார். "அனைத்து FIR நகல்களின் அடிப்படையில் (அசாமுக்கு எதிராக) ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். நீதிமன்றங்களில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, அங்கிருந்து எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்று யாதவ் கூறினார்.

இதை தொடர்ந்து, ராம்பூரில் ஆஸம்கானின் குடும்பத்தினரை அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசினார். பின்னர், நில ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளாகியுள்ள, ஆஸம்கானின், முகமது அலி ஜவ்ஹர் பல்கலைக்கழகத்திற்கும் அகிலேஷ் யாதவ் சென்றார். சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆஸம்கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அப்போது அவர் உறுதியளித்தார். தேவைப்பட்டால், ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து மாநில அரசின் அடக்குமுறை குறித்து புகார் தெரிவிக்கப் போவதாகவும் அகிலேஷ் தெரிவித்தார். 

 

Trending News