பெண்கள் பாதுகாப்புக்காக லேடிஸ் கோட்ச் நிறம் மற்றம்!

பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ரயிலில் லேடிஸ் கோட்ச் பேட்டியின் நிறம் மற்றபடுவதாக தகவல்! 

Last Updated : May 5, 2018, 10:18 AM IST
பெண்கள் பாதுகாப்புக்காக லேடிஸ் கோட்ச் நிறம் மற்றம்!  title=

பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ரயிலில் லேடிஸ் கோட்ச் பேட்டியின் நிறம் மற்றபடுவதாக தகவல்! 

இந்தியாவில் நாளுக்குநாள் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்புணர்வு, 8 மாத குழந்தை முதல் 80 வயது மூதாட்டி  வரை பாலியல் சீண்டல், குறிப்பாக ரயில் பயணங்களில் ஏற்படும் இத்தகைய குற்றங்களை தடுக்க மத்திய அரசு, ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோகானி தலைமையில் குழு ஒன்று அமைத்து ரெயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. 

அதன்படி அக்குழு சமர்ப்பித்த அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது...! 

ரயில்களில் பெண்களுக்கான பெட்டி கடைசியில் இருப்பதால் ஆபத்தான நேரங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் போகிறது. இதனால் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற வேண்டும். பெண்கள் பெட்டிகளில் மட்டும், அவர்களின் பாதுகாப்புக் கருதி சி.சி.டி.வி கேமராக்களை அமைக்கலாம். பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காணும் வகையில், ரெயில் பெட்டிகளின் மற்றவற்றின் நிறத்தில் இருந்து இதற்கு வேறுபட்ட நிறத்தை பூசலாம். குறிப்பாக உலகளவில் பெண்களின் நிறத்தை குறிக்கும் 'பிங்க்' நிறம் பூசலாம். நீண்ட தூர மற்றும் புறநகர் ரயில்களில் என அனைத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இந்த பரிந்துரைகளை அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News