Crypto Vs Digital Currency: கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வித்தியாசம்

Crypto Vs Digital Currency: கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் இடையேயான வேறுபாடுகள்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 04:27 PM IST
Crypto Vs Digital Currency: கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வித்தியாசம் title=

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தனது 2022-2023 பட்ஜெட் உரையின் போது, ​​கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrency) மற்றும் NFT உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகளை (Digital Assets) மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். நிதி அமைச்சரின் அறிவிப்பு பெரும்பாலான கிரிப்டோ மற்றும் என்எப்டி முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது, ஆனால் பலர் அதை பெரும்பாலும் நேர்மறையான அறிவிப்பாக எடுத்துக் கொண்டனர். எந்தவொரு வரியையும் விதிப்பது என்பது நாட்டில் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படாது என்று அவர் கூறுகிறார், இருப்பினும், இது முறைப்படுத்தலைக் குறிக்காது. நாட்டில் கிரிப்டோகரன்சிகள் மீது அரசாங்கம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை கொண்டு வரும் என்றும், அது சிபிடிசி அல்லது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (Digital Currency) எனப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார். ரிசர்வ் வங்கி பல மாதங்களாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கி வருகிறது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் (Nirmala Sitharaman) கூற்றுப்படி, இது அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று சீதாராமன் கூறினார். 

ALSO READ | டிஜிட்டல் சொத்து மீதான வரி : தப்புவார்களா முதலீட்டாளர்கள்?

கிரிப்டோ கரன்சிகள் (Cryptocurrency) என்பவை நிஜ நாணயங்கள் அல்ல. மாறாக, தனியாக உருவாக்கப்பட்ட சொத்துகளாக கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் நாணயங்கள் என்பது அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாணயத்தின் மின்னணு வடிவங்கள் ஆகும்.

கிரிப்டோகரன்ஸிகள், அல்லது டிஜிட்டல் நாணயங்கள், குறியாக்கத்தால் பாதுகாக்கப்படும் மதிப்பின் ஸ்டோர் ஆகும். இந்த டிஜிட்டல் நாணயங்கள் அனைத்தும் தனியாருக்குச் சொந்தமானவை மற்றும் உருவாக்கப்பட்டவை ஆகும்.

டிஜிட்டல் கரன்சிகளை ரிசர்வ் வங்கி போல ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியே உருவாக்குகிறது. எனவே, இறையாண்மை கொண்ட ஒரு மத்திய வங்கியின் ஆதரவு டிஜிட்டல் கரன்சிகளுக்கு உண்டு. ஆக, கிரிப்டோ கரன்சிகளை போல அல்லாமல் டிஜிட்டல் கரன்சிகளுக்கு பாதுகாப்பு அதிகம்.

டிஜிட்டல் கரன்சிகள் சட்டமுறை அங்கீகாரத்துடன் வெளிவருவதால் அவற்றை வங்கியிலேயே சேமிக்க அனுமதி கிடைக்கும். ஆனால், சட்ட அங்கீகாரம் கிடைக்காத கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க தனி வாலட்டுகள் தேவைப்படும்.

டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளின் விவரங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள், அனுப்புபவர் மற்றும் பெறுபவர் விவரம் வங்கிக்கு மட்டுமே கிடைக்கும். கிரிப்டோ பரிவர்த்தனைகளின் விவரங்கள் பரவலாக்கப்பட்ட லெட்ஜர் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

ALSO READ | Cryptocurrency: கட்டுப்பாடா? தடையா? இந்திய அரசின் முடிவு என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News