செருப்பு விஷயத்தில் ஜாக்கிரதை: இந்த தவறுகள் அதிக இழப்பை ஏற்படுத்தலாம்

காலணிகளுக்கும் ஜாதகத்தின் கிரக வெளிப்பாடுகளுக்கும் தொடர்புள்ளது. ஜோதிடத்தின் படி, ஜாதகத்தின் எட்டாவது வீடு உள்ளங்கால்களுடன் தொடர்புடையது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 08:20 PM IST
செருப்பு விஷயத்தில் ஜாக்கிரதை: இந்த தவறுகள் அதிக இழப்பை ஏற்படுத்தலாம் title=

Good Luck Tips: சுத்தமான உடைகள் மற்றும் காலணிகளை அணிந்துகொள்பவர் மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறார். ஆடைகள் அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும், காலணிகளை எப்போதும் நன்றாக அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆளுமை மேம்பாட்டின் விஷயத்தில் இந்த விஷயங்கள் அடிக்கடி கூறப்பட்டாலும், ஜோதிட விஷயத்திலும் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

ஜோதிடத்தின் படி எட்டாவது வீடு காலணிகளுடன் தொடர்புடையது

காலணிகளுக்கும் ஜாதகத்தின் (Horoscope) கிரக வெளிப்பாடுகளுக்கும் தொடர்புள்ளது. ஜோதிடத்தின் படி, ஜாதகத்தின் எட்டாவது வீடு உள்ளங்கால்களுடன் தொடர்புடையது. ஒரு நபர் தவறான காலணிகளை அணிந்தால், அவர் தொழில் மற்றும் பணத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். எனவே, காலணிகள் அணிவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்கு ஜோதிடத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பல நேரங்களில் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை அளித்துக்கொள்ளும் போது, காலணிகள் மற்றும் செருப்புகளை பரிசாக வழங்குகிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் கொடுப்பவருக்கும் வாங்கிக்கொள்பவருக்கும் அதிக சிரமங்கள் ஏற்படுகின்றன. 

பரிசளிக்கப்பட்ட காலணிகளை அணிவதால், சனி பகவான் (Shani) மோசமான விளைவுகளை கொடுக்கத் தொடங்குகிறார். எனவே, காலணிகள் மற்றும் செருப்புகளை பரிசாக கொடுக்கவோ அல்லது வாங்கிக்கொள்ளவோ கூடாது.

கிழிந்த காலணிகள்:

மறந்தும்கூட கிழிந்த அல்லது சேதமடைந்த காலணிகளை அணிய வேண்டாம். குறிப்பாக வேலைக்கான நேர்காணல் அல்லது முக்கிய பணிகளுக்காக செல்லும்போது, கிழிந்த அல்லது சேதமடைந்த காலணிகளை அணிய வேண்டாம். அப்படி செய்தால், வெற்றி கிடைக்க வேண்டிய இடத்தில் தோல்வியே கைகிட்டும்.

ALSO READ:Weekly Horoscope: இந்த 2 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் 

திருடப்பட்ட காலணிகள் பல வித சோதனைகளை அளிக்கும். பல சமயங்களில் சமூக நிகழ்ச்சிகளிலோ அல்லது கோவில்களிலோ (Temples) காலணிகள் திருடப்படுவது வழக்கம். சிலர் தங்கள் காலணிகள் திருடப்பட்டால், மற்றவர்களின் காலணிகளை அணிந்துகொண்டு வருவார்கள், அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கும் செல்வத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

மஞ்சள் நிற காலணிகள்:

மஞ்சள் நிற காலணிகளை அணிவதும் மிகவும் அசுபமானது. மஞ்சள் நிறம் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிற காலணிகளை அணிவதால் மரியாதை மற்றும் பண இழப்பு ஏற்படுகிறது.

பிரவுன் ஷூக்கள்:

பணியிடத்தில் பிரவுன் கலர் ஷூக்களை அணியாதீர்கள். இது பணியிடத்தில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News