ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: பணி ஓய்வுபெறும் வயது, ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படலாம்

மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக்கூடும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 03:52 PM IST
  • ஓய்வூதிய வயது மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படலாம்.
  • பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • அரசின் இந்த புதிய திட்டம் ஊழியர்களுக்கு நன்மை பயக்கும்.
ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: பணி ஓய்வுபெறும் வயது, ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படலாம் title=

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அரசு நல்ல செய்தியை வழங்க உள்ளது. ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. 

இந்த முன்மொழிவு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவால் அனுப்பப்பட்டுள்ளது. இதில், நாட்டில் பணியில் உள்ள ஊழியர்களின் வயது வரம்பை உயர்த்துவது குறித்து கூறப்பட்டுள்ளது. இதனுடன், நாட்டில் பணி ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன், யூனிவர்சல் பென்ஷன் முறையையும் தொடங்க வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. 

மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு

குழுவின் அறிக்கையின்படி, இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். நாட்டில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு சிறந்த ஏற்பாடுகளை பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தகது. 

திறன் மேம்பாடு அவசியம்

பணிபுரியும் வயதிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு ஓய்வு பெறும் வயதையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு அமைப்பின் மீதான அழுத்தத்தை குறைக்க இது செய்யப்படலாம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரேஷன் கார்ட் இல்லாமலும் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறலாம்: இதோ வழிமுறை 

அரசாங்கங்கள் கொள்கைகளை உருவாக்குகின்றன

திறன் மேம்பாடு ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரும் சேர்க்கப்பட வெண்டும். இவர்களிடம் பெரும்பாலும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் இருப்பதில்லை. எனினும், இவர்களும் திறன் பெற்றிருக்க வேண்டுயது அவசியமாகும். 

உலக மக்கள்தொகை ப்ராஸ்பெக்டஸ் 2019 அறிக்கை

2019 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது. அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 19.5 சதவீதம் பேர் ஓய்வு பெற்றவர்கள் என்ற பிரிவிற்குள் இருப்பார்கள். 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் அதாவது சுமார் 140 மில்லியன் மக்கள் மூத்த குடிமக்கள் பிரிவில் உள்ளனர்.

மேலும் படிக்க | பகீர் தகவல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை உயரலாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News