மீன ராசியில் குரு; ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘4’ ராசிகள் இவை தான்!

ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 21, 2022, 04:35 PM IST
  • புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • திடீரென்று பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
  • தடைபட்ட வேலைகள் விரைவில் நிறைவேறும்.
மீன ராசியில் குரு; ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘4’ ராசிகள் இவை தான்! title=

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்து இராசி களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். கடவுள்களின் குருவாகக் கருதப்படும் வியாழன் எனப்படும் குரு பகவான், நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார் தற்போது வக்ர நிலையில் இருக்கும். குரு நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். 

கும்பம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் கும்பத்தின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிப்பார். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திடீரென்று பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். முக்கியமான ஒரு பிராஜெக்டில் இணைய வாய்ப்பு கிடைக்கும். புதிதான வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!

கடகம்
கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் நிலை மாறுகிறார். இதன் காரணமாக, அதிர்ஷ்ட காற்று வீடும். குரு முழுவதுமாக அமையும் பட்சத்தில் இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் விரைவில் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வணிக பயணம் செல்லலாம். இங்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களும் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.

மிதுனம்

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்கு 10வது வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கப் போகிறார். இதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். அதே சமயம் புதிய வேலை வாய்ப்பும் வரலாம். பதவி உயர்வு கிடைக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. வியாபாரம் செய்பவர்கள் ஆர்டர் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்.

ரிஷபம்

கடந்த ஜூலை 29 அன்று, குரு மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆனது. நவம்பர் 24 அன்று தனது நிலையை மாற்றிக் கொண்டு இயால்பு நிலைக்கு மாறும். இந்த ராசியில் குரு பகவான் 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வருமானத்திலும் பண ஆதாயத்திலும் வெற்றியை தரும். ரிஷபம் ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மேலும், வியாபாரத்திலும் லாபம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வாகனம், சொத்து வாங்குவது பற்றி யோசிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News