Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!

இந்திய இரயில்வே பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை வேறு ஒரு நபருக்கு மாற்ற அனுமதிக்கிறது. இந்த வசதி பற்றி பலருக்கு தெரிவதில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 05:21 PM IST
Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!  title=

Indian Railways:  உங்களிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட்  உள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலோ,  உங்களது டிக்கெட்டை அவர் பெயரில் மாற்ற ரயில்வே அனுமதிக்கிறது. இதற்கான சிறப்பு வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

ரயில் பயணிகளுக்கான சிறப்பு வசதி

சில சமயங்களில், ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின் பயணிக்க முடியாத நிலை ஏற்படும்.  இதுபோன்ற சூழ்நிலையில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய டிக்கெட்டை எடுக்க வேண்டிய அவலநிலையை ரயில்வே பயணிகள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர். ஆனால் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். அதனால்தான் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் அதிகமான பேருக்கு இது பற்றி தெரியவில்லை. ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

ALSO READ | Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்? பயணத் தேதியை மாற்றலாம்!

உங்கள் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றலாம் 

ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நண்பர்கள் என வேறு யாருடைய பெயரிலும் மாற்றலாம். இதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் துண்டிக்கப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் போடப்படுகிறது.

விண்ணப்பத்தை 24 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்

பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது பணிக்காக செல்கிறார் என்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் கோரலாம். இந்த டிக்கெட் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நபரின் பெயருக்கு மாற்றப்படும். திருமணத்திற்கு செல்பவர்களுக்கு இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும்.

ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!

ஒரு முறை மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்

பயணச்சீட்டுகளை மாற்றுவது என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே கூறுகிறது. அதாவது ஒரு பயணி தனது பயணச்சீட்டை வேறொரு நபருக்கு மாற்றியிருந்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது.

உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றும் வழிமுறை:

1. டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

2. அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்.

3. டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்பட வேண்டுமோ, அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.

4. கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News