Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்

Indian Railways Ticket Booking : ரயிலில் பயணம் செய்பவர்கள் இனி டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செல்ல வேண்டிய இடத்தின் முகவரியைக் கொடுக்க வேண்டியதில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2022, 11:30 AM IST
  • ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.
  • டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இனி இதை செய்ய வேண்டாம்.
  • முன்பதிவுக்கு ஆகும் நேரம் குறையும்.
Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம் title=

இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு: அதிகமாக ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று உள்ளது. இது பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தியாக இருக்கும். இந்திய ரயில்வே இப்போது டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது. 

இந்த மாற்றத்திற்கு பிறகு, முன்பை விட இப்போது குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ரயில்வே எடுத்துள்ள முடிவின்படி, இப்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சேருமிட முகவரியைக் கொடுக்க வேண்டியதில்லை.

இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியது

இந்திய ரயில்வே சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சேருமிட முகவரியை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளதால் பயணிகளிடம் சேருமிடத்தின் முகவரியை ஐஆர்சிடிசி இனி கேட்காது. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

பல விதிகள் அமலில் இருந்தன

கோவிட் பாதிப்பு அதிகரித்த போது, ​​கோவிட் பாசிட்டிவ் நபரைக் கண்டறிய இலக்க முகவரி உதவியாக இருந்தது. கொரோனா காலத்தில் தொற்றை சமாளிக்கும் வகையில், ரயில்வே பல விதிகளை அமல்படுத்தியது. கொரோனா பாதிப்புகள் குறைந்து, இயல்பு நிலை ஏற்படும் போது விதிகள் ஒவ்வொன்றாக திரும்பப் பெறப்படுகின்றன.

மேலும் படிக்க | Indian Railways: பயணத்தின் போது கண்டிப்பாக லோயர் பர்த் கிடைக்க IRCTC சொன்ன வழி 

டிக்கெட் முன்பதிவு குறைந்த நேரம் எடுக்கும்

ரயில்வே அமைச்சகத்தின் இந்த விதி திரும்பப் பெறப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரமும் குறையும். இலக்கு விவரங்களை பெற வேண்டாம் என ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிஆர்ஐஎஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவையும் உத்தரவின்படி மென்பொருளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

முன்னதாக, ஏசி பெட்டிகளில் தலையணை, போர்வை வழங்கும் வசதியை ரயில்வே மீண்டும் தொடங்கியது. தொற்றுநோய் அதிகமாக பரவிக்கொண்டிருந்த காலத்தில், இது நிறுத்தப்பட்டாலும், இப்போது பல்வேறு ரயில்களில் பயணிகளுக்கு இரவில் தூங்குவதற்கு தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க | கூடிய விரைவில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News