சுமார் 50 லட்சம் ஆண்டுகள் பழமையான யானையின் தாடை கண்டுபிடிப்பு...!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 50 லட்சம் ஆண்டுகள் பழமையான யானையின் தாடையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்..!

Last Updated : Jun 20, 2020, 08:20 PM IST
சுமார் 50 லட்சம் ஆண்டுகள் பழமையான யானையின் தாடை கண்டுபிடிப்பு...!  title=

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 50 லட்சம் ஆண்டுகள் பழமையான யானையின் தாடையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்..!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டம், சிவாலிக் காடுகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட யானை தாடைகளை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு இந்த விஷயம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. விலங்குகளின் கணக்கெடுப்பின் போது வனத்துறையினருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த புதைப்படிவ ஸ்டெகோடன் (Stegodon) இனம் யானையின் தாடை என்றும் இது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலானது என்றும் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் இமாலய புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ANI தகவலின் படி, சஹரன்பூர் மாவட்டத்தின் கீழ் சஹாரன்பூரின் சிவாலிக் வன பிரிவு 33229 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. சஹரன்பூரில் உள்ள பாட்ஷாஹி பாக் நகரைச் சேர்ந்த இந்த யானையின் தாடையை வனத்துறை கண்டுபிடித்துள்ளது. சஹரன்பூர் மாவட்டத்தின் கீழ் உள்ள சிவாலிக் வனப்பிரிவு சஹரன்பூரின் வனப்பகுதியாகும், இதில் வனவிலங்குகளை எண்ணும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, வனத்துறை இந்த பகுதியில் சிறப்பு கணக்கெடுப்பு பணிகளை செய்து வருகிறது. முதல் முறையாக கேமரா பொறியின் மூலம், சிவாலிக் நகரில் 50-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

READ | நீங்களும் ₹.1 லட்சம் வெல்ல ஒரு அருமையான வாய்ப்பு... நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

சஹரன்பூரின் தலைமை வனத்துறை பாதுகாவலர் வீரேந்திர குமார் ஜெயின் கூறுகையில், இந்த 50 லட்சம் வயது யானையின் தாடையை ஒரு சிறப்பு கணக்கெடுப்பின் போது பெற்றுள்ளோம். யாருடைய கணக்கெடுப்பு வாடியா நிறுவனம் செய்துள்ளது. இந்த தாடை கிட்டத்தட்ட 50 லட்சம் வயதுடைய யானைகளின் மூதாதையர்களுக்கு சொந்தமானது என்று அவர் கூறினார். அதே நேரத்தில் யானையின் பற்கள் 12 முதல் 18 அடி நீளமும், அந்த நேரத்தில் ஹிப்போபொட்டமஸ், குதிரையும் சமகாலத்தில் இருந்தன, இது விலைமதிப்பற்றது என அவர் குறிப்பிட்டார்.

Trending News