Astrology: ஜாதகத்தில் அமையும் பஞ்ச மகா புருஷ யோகம் வெற்றிகளை அள்ளித்தருகிறது..!!

ஜாதகத்தில் பஞ்சமஹாபுருஷ யோகம் மிகவும் அரிதானது எனவும், இதனால் வாழ்க்கையில் அனைத்து நிலையிலும் வெற்றிகளை கொண்டு சேர்க்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2022, 07:17 AM IST
  • ஹம்ச யோகம் மனிதனை ஞானியாக்குகிறது.
  • ஜாதகத்தில் சனியின் நிலையால் சச யோகம் உருவாகும்.
  • ருச்சுக யோகம் ஆட்சியில் வெற்றியைத் தரும்.
Astrology: ஜாதகத்தில் அமையும் பஞ்ச மகா புருஷ யோகம் வெற்றிகளை அள்ளித்தருகிறது..!! title=

ஜோதிட சாஸ்திரப்படி ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைப்படி ஜாதகத்தில் சில சுப யோகங்கள் உருவாகும். ஜாதகத்தில் பஞ்சமஹாபுருஷ யோகம் மிகவும் அரிதானது எனவும், இதனால் வாழ்க்கையில் அனைத்து நிலையிலும் வெற்றிகளை கொண்டு சேர்க்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

யோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகும் யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும். இவை ருச்சுக யோகம், பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்த யோகம் இருந்தால் வாழ்க்கையில் எந்த விதமான போராட்டமும் இருக்காது. ஜாதகத்தின் 5 சுப யோகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

ருச்சுக யோகம்

லக்னத்தில் செவ்வாய் உச்சத்தில் இருக்கும் போது அல்லது லக்னம் அல்லது சந்திரனில் இருந்து 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீட்டில் செவ்வாய் அமையும் போது ருச்சசுக யோகம் உண்டாகும். இந்த யோகம் வியாபாரத்தில் வெற்றியையும், உயர் பதவியை அடைவதையும், ஆட்சித் துறையில் மகத்தான வெற்றியையும் தருகிறது.

பத்திர யோகம்

ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை நன்றாக இருக்கும்போது. மேலும், ஜாதகரின் வீட்டில் சந்திரனுக்கு 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் புதன் அமைந்தால், பத்திர யோகம் உருவாகும். இந்த யோகத்தின் பலன் மூலம், நபர் தனது புத்திசாலித்தனத்துடன் வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறார்.

ஹம்ச யோகம்

ஜாதகத்தில் வியாழன் காரணமாக ஹம்ச யோகம் உருவாகிறது. வியாழன் உயர்ந்த நிலையில் அல்லது கேந்திர வீட்டில் எங்கும் அமைந்தால், ஹன்ஸ் யோகம் உருவாகிறது. ஹம்ச யோகத்தின் பலன் காரணமாக, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெறுகிறார். மேலும் அத்தகையவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | சுக்ரனின் அருளால் இம்மாதம் முழுவதும் 4 ராசிகள் காட்டில் பண மழை பெய்யும்!

மாளவ்ய யோகம்

ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், லக்னம் அல்லது சந்திரனில் இருந்து கேந்திர வீடுகளில் அமைந்திருக்கும்போது அல்லது லக்னம் அல்லது சந்திரனிலிருந்து 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் அமைந்தால், மாளவய யோகம் உருவாகும். இந்த யோகத்தின் செல்வாக்கின் காரணமாக, ஒரு நபர் திரைப்படம், இசை, கலை, கவிதை போன்ற துறைகளில் மகத்தான வெற்றியைப் பெறுகிறார். மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

சச யோகம் 

சனியால் ஷஷ யோகம் உருவாகும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து கேந்திர வீட்டில் அதாவது சந்திரனுக்கு 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் சனி அமைந்தால் ஷஷ யோகம் உண்டாகும். ஷஷ யோகத்தின் பலன் காரணமாக, நபர் நியாயமானவராகவும், நேர்மையாகவும், நீண்ட ஆயுளுடனும், ராஜதந்திரத்தில் பணக்காரராகவும் மாறுகிறார். அத்தகையவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மேலும், எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறும் திறன் அவர்களுக்கு உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News