திருப்பதி கோவிலில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து!

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நாளை 5 மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

Last Updated : Jul 9, 2018, 10:47 AM IST
திருப்பதி கோவிலில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து! title=

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நாளை 5 மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய தினங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கமாகும். 

திருப்பதியில் வருகிற 17-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால், நாளை ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம்செய்யப்பட உள்ளது. 

இதனால் காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Trending News