உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க

Ration Card Rules: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2022, 04:00 PM IST
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி
  • ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதிகள்
  • அரசு வெளியிட்ட மற்றொரு முக்கிய அறிவிப்பு
உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து; புதிய ரூல்ஸ் தெரிஞ்சிகோங்க title=

நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும். கொரோனா பாதிப்பின் போது, ​​ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் முறையை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி அரசின் இந்த இலவச ரேஷன் திட்டத்தில் தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாகவும் அரசுக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த செய்தியை அரசு மறுத்துள்ளது
சமீப காலத்தில், பல ஊடகங்களில் வெளியான செய்தியில், தகுதியற்றவர்களிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுப்பதாகக் கூறப்பட்டது. ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த உ.பி., அரசு, இதுகுறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன், அதுபோன்ற எந்த உத்தரவும் அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

இருப்பினும், ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் குறித்த முழுமையான தகவல்கள் உங்களிடம் இருப்பது முக்கியமாகும். ரேஷன் கார்டு தவறான முறையில் தயாரிக்கப்பட்டு, அரசின் ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டால், யார் வேண்டுமானாலும் உங்களிடம் புகார் செய்யலாம். இதுமட்டுமின்றி, விசாரணையில் புகார் உண்மை எனத் தெரிந்தால், உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். இதற்கு என்ன விதிகள் என்று தெரிந்து கொள்வோம்?

கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ப்ளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தால், அப்படிப்பட்டவர்கள் அரசிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் மலிவான விலையில் ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியாது.

அரசு வெளியிட்ட மற்றொரு முக்கிய அறிவிப்பு
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஜூன் 19 முதல் 30 வரை இலவச ரேஷன் விநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. இம்முறையும் கோதுமைக்கு பதிலாக அரிசியை அரசே விநியோகிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த முறையும் உங்களுக்கு இலவச ரேஷன் கீழ் கோதுமை கிடைக்காமல் போகும்.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News