ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை - விக்ரம் சோகம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை என்று நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 26, 2022, 03:13 PM IST
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ல் ரிலீஸ்
  • படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன
  • இன்று படக்குழு டெல்லி சென்றிருக்கிறது
 ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை - விக்ரம் சோகம் title=

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. 

இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதால் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மே அல்லது ஜூனில் வெளியாகுமென்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.

 

இப்படிப்பட்ட சூழலில் 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகியுள்ளது.

Vikram

இந்நிலையில் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் பேசியபோது, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார். 

மேலும் படிக்க | அவருக்காக உயிரை விடுகிறோம்; கைக்கூட அசைக்கமாட்டாரா - வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் வாக்குவாதம்

இதை தொடர்ந்து இந்த முறை 'பொன்னியின் செல்வன்' படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்” என்றார். தற்போது அவரது பேச்சு சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News