மாரி சீரியலில் இருந்து விலகிய சோனா...காரணம் என்ன? இதோ விவரம்

பிரபலமான தொடர்களுள் ஒன்றான மாரி சீரியலில் இருந்து நடிகை சோனா விலகியுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : May 4, 2023, 01:31 PM IST
  • சோனாவை மாரி சில நாட்களாகவே சீரியலில் பார்க்க முடியவில்லை.
  • தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என சோனா தெரிவித்துள்ளார்.
  • மாரி தொடரிலிருந்து சோனா விலகியதால் ரசிகர்கள் சோகம்.
மாரி சீரியலில் இருந்து விலகிய சோனா...காரணம் என்ன? இதோ விவரம் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மாரிக்கு வில்லியாக தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகை சோனா. 

 

கவர்ச்சி நடிகையாக சினிமாவில் வலம் வந்த இவர் இனி நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக அறிவித்து இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்து நல்ல நடிப்பையும் கொடுத்து வந்தார். 

 

தொடரிலிருந்து காணாமல் போன சோனா:

 

கடந்த சில நாட்களாகவே சோனாவை மாரி சீரியலில் பார்க்க முடியவில்லை, இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிய நிலையில் தற்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி தரப்பில் இருந்து விசாரிக்கையில் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் கால்சீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர். 

 

சோனாவின் அறிவிப்பு:

 

சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள சோனா, இது போன்ற நல்ல கதாபாத்திரத்தை கொடுத்த மாரி சீரியல் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்த தாரா யார் என்பது குறித்து தெரிய வரும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த சீரியலில் சகுந்தலாவாக நடிக்கும் வனிதாவின் ரீ-என்ட்ரி, முத்து பேச்சி கதாபாத்திரத்தில் தேவயானி என்ட்ரி என வரும் நாட்களில் சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: டென்ஷனான சீதா.‌. மகாவுக்கு விட்ட சூப்பர் சவால்!!

 

ரசிகர்கள் சோகம்:

 

ஜீ தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக விளங்கும் மாரியில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்தவர் சோனா. தாரா என்ற கதாப்பாத்திரத்தை நடித்த இவர். கடந்த ஜனவரி மாதம் நடைப்பெற்ற ஜீ குடும்ப விருதுகள் விழாவில் சிறந்த வில்லிக்கான விருதையும் இவர் வென்றார். சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த இவர் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் வந்தார். இப்போது அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ‘இனி சோனாவை திரையில் பார்க்க முடியாதா’ என ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 

 

மனோபாலா குறித்து நடிகை சோனா:

 

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த பிரபல நடிகர் மனோபாலாவிற்கு நடிகை சோனா இரங்கல் தெரிவித்தார். மனோபாலாவின் இல்லத்திற்கு நேற்று சென்ற அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மனோபாலாவுடன் 3 படங்களில் நடித்துள்ளதாகவும் அவரை குடும்பத்தில் ஒருவர் போல தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும், மனோபாலா உதவி செய்ய தயங்காதவர் என்றும் அவர் என்னுடன் நன்கு பழகியவர் என்று கூறுவதில் மிகவும் பெருமை கெள்வதாகவும் சோனா நேற்று தெரிவித்தார்.

 
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News