அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: எதிர்பாரா பல ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோட்!

Amudhavum Annalakshmiyum Episode Update Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2023, 01:03 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களுள் ஒன்று அமுதாவும் அன்னலட்சுமியும்.
  • இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
  • இன்றைய எபிசோட் அப்டேட் என்ன..? தொடர்ந்து படியுங்கள்.
அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: எதிர்பாரா பல ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோட்! title=

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் பல நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் நேற்றைய எபிசோடில் அம்மனுக்கு மிளகாய் அறைத்து பூசும் சடங்கில் பழனிக்கு உடம்பு எரிய தொடங்க அவனது கையில் இருப்பது தான் போலி பத்திரம் என்று என்று தீர்ப்பளித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இன்றைய எபிசோட் அப்டேட்..

அம்மனின் அருளால் வெற்றி கண்ட அமுதா கதிரேசன் போட்டோ முன் நின்று நன்றி சொல்கிறாள். அடுத்து மாயா இரவு செந்திலின் நிலம் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு சாமி சிலைய எடுத்து நிலத்தில் தோண்டி புதைத்து வைக்கிறாள். மறுநாள் காலை நிலத்தை அளப்பதற்காக சர்வேயர்களுடன் செந்தில் குடும்பத்தினர் மற்றும் சேட்டு வருகின்றனர். இதையெல்லாம் மாயா மறைந்து நின்று பார்க்கிறாள்.

மேலும் படிக்க | ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: சகோதர சகோதரி பாசத்தை அழகாக வெளிப்படுத்திய 5 தமிழ் படங்கள்..!

கொஞ்ச நேரத்தில் மாயா ஒரு பெண்ணை கண்ணை காட்ட அந்த பெண் திடீரென சாமியாடி , இது ஆத்தாவோட இடம் , நான் ஆத்தா வந்திருக்கேன், நான் இருக்குற இடத்தை எப்படிடா நீங்க விக்கலாம் இது என் இடம் தான்னு நிரூபிக்கட்டுமா என கேட்டபடி ஒரு இடத்தை காட்டி இங்க தோண்டுங்கடா என்று சொல்ல ஆட்கள் அதை தோண்டி பார்க்க, உள்ளே சாமி சிலை இருக்கிறது.

Amudhavum Annalakshmiyum

இதனால் சேட்டு மாணிக்கத்திடம் ஆரம்பத்தில் இருந்து இந்த இடத்தை வாங்குறதுல பிரச்சனை இருக்கு, இதுக்கு மேல இந்த இடம் வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்ப மாயா அதை பார்த்து சிரித்து கொள்ள
வடிவேல் நடந்தவற்றை பழனி, உமாவிடம் சொல்ல இருவரும் அந்த வீடு நம்ம கைக்கு வந்துரும் என சந்தோஷப்படுகின்றனர்.

இங்கே அமுதா, மாணிக்கம், செந்தில் வீட்டுக்கு வர, அன்னம் பணம் கிடைச்சிடுச்சா என கேக்க, மாணிக்கம் நடந்தவற்றை சொல்ல இது எல்லாம் அந்த பழனியோட வேலை தான் என சொல்கிறாள். செந்தில் ரூமில் அமர்ந்திருக்க, அவன் முன்னால் பாம்பு ஒன்று நின்று கொண்டிருக்க அமுதா சத்தம் போட்டு அனைவரையும் கூப்பிடுகிறாள். அனைவரும் பயந்து போய் நிற்க மாயா வந்து பாம்பை பிடித்து தூக்க அமுதா ஷாக்காகி நிற்க மாயா பாம்பை தூக்கி போடப் போக பாம்பு மாயாவை கொத்தி மயங்கி விழுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நடிகர் சிம்புவிற்கு ‘செக்’ வைத்த நீதிமன்றம்..! ரெட் கார்டை தொடர்ந்து வந்த புது சிக்கல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News