பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் 'வாசாமி'!

அண்ணாத்த படத்தின் மூன்றாவது பாடலான வாசாமி வெளியாகியுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 08:54 PM IST
பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் 'வாசாமி'!   title=

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'அண்ணாத்த' படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா,மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ்,ஜெகபதி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் கலந்த காம்போவாக இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ALSO READ நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள்: ரஜினிகாந்த் உற்சாக ட்வீட்

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிராமத்தான் லுக்கில் கெத்தாக இருந்தார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த படம் அனைவருக்கும் தீபாவளி விருந்தாக நவம்பர் 4-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  போஸ்டர் ரிலீஸ் ஆனதிலிருந்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமானது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இந்த படத்திற்கு ஓப்பனிங் சாங்கான 'அண்ணாத்த' என்று ஆரம்பிக்கும் பாடலை பாடியுள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எஸ்.பி.பி-ன் நினைவு நாளான செப்டம்பர் 25 அன்று ரிலீசாகி அனைவருக்கும் ஆனந்தமளித்தது.

முதல் சிங்கிளின் வரவேற்பைத் தொடர்ந்து படக்குழு அக்டோபர் 9-ம் தேதியன்று இரண்டாவது சிங்கிளையும் கோலாகலமாக வெளியிட்டது. "சாரல் காற்றே" எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை வருடியது. இந்தப் பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர்.  இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படக்குழு மூன்றாவது சிங்கிளை அக்டோபர் 19-ம் தேதியன்று வெளியிட்டது. இது ரஜினிக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையிலான பாச பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'மருதாணி' எனத் தொடங்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.  

தற்போது அண்ணாத்த படத்தின் 4வது சிங்கிள் வெளியாகி உள்ளது.  "மருதாணி செவப்பு செவப்பு" என்ற இந்த பாடலில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடனமாடியுள்ளனர்.கீர்த்தி சுரேஷிற்கு திருமண வாழ்த்து கூறும் விதமாக அதாவது பெண்ணின் பெருமைகளை பெண் வீட்டார் பாடும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அமுதவன் என்பவர் எழுதியுள்ளார்.டி.இமான் இசையில் இந்த பாடலை பாடகர்கள் நாகாஸ் அசிஸ், ஆண்டனி தாசன், வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

 

ALSO READ அதிக சம்பளம் கேட்டாரா கீர்த்தி சுரேஷ்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News