‘மறக்குமா நெஞ்சம்’ விவகாரம்: டிக்கெட் பணம் திருப்பி தரப்படுமா..? ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..!

AR Rahman Marakkuma Nenjam Concert: மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் 'இந்த’ இணையதள முகவரிக்கு தங்கள் டிக்கெட்டுகளை அனுப்பலாம் என்று கூறி ஒரு முகவரியை இணைத்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Sep 11, 2023, 12:33 PM IST
  • ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
  • இதில் கலந்து கொள்ள பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
‘மறக்குமா நெஞ்சம்’ விவகாரம்: டிக்கெட் பணம் திருப்பி தரப்படுமா..? ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..! title=

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நேற்று பொது மக்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டு பெறும் பிரச்சனையாக வெடித்தது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் X தளத்தில் ஒரு ட்வீட்டினை வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது X தள பதிவில், “அன்பார்ந்த சென்னை மக்களே, சில மோசமான சூழ்நிலைகளால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்கள் உங்களது டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்புங்கள். கூடவே, எந்த வகையிலான பிரச்சனையை சந்திந்தீர்கல் என்பதையும் குறிப்பிடுங்கள். எங்களது குழுவினர் உங்களை தொடர்பு கொள்வர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனால், டிக்கெட் இருந்தும் உள் நுழைய முடியாமல் போனவர்களுக்கு தீர விசாரித்த பின்னர் டிக்கெட் பணம் திரும்பி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்தி வைக்கப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி..

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரிகளை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசைக்கச்சேரி நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி மழையால் அன்றைய தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டு நேற்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

மறக்க முடியாத சம்பவம் செய்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசைக்கச்சேரி..!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலியில் உள்ள ஆதித்யா ராம் பாலஸில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிறக்கணக்கானோர் திரண்டனர். இதில் வெள்ளி, தங்கள், வைரம், பிளாட்டினம் என்ற வகைகளில் ரூபாய் 2,000 முதல் ரூபாய்.15,000 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ரத்து செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கெட்டுகளையே இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த டிக்கெட்டுகளுடன் உள்ளே சென்ற பல ஆயிரம் பேருக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள், ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் “எங்கள் வாழ்க்கையில் இந்த சம்பத்தை மறக்க முடியாது” என பாதிக்கப்பட்ட ரசிகர்கள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர். 

மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிறுவனம்!

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ரசிகர்கள் தங்களது நிலையை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கூறியதை அடுத்து ஏ.சி.டி.சி நிறுவனம் X தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. 

அதில், “சென்னை மக்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் சாருக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்த உறுதுனையாக இருந்ததற்கு நன்றிகள். அருமையான ரசிகர்கள் கூட்டமும் அவர்களது உற்சாகமும் மட்டுமே இந்த விழா வெற்றிகரமாக அமைய காரணமாக இருந்தது. அதிக கூட்டம் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நேற்று நடந்த சம்பவத்த்ற்கு நாங்கள் முழு பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | சுத்தமா‌ Vibe ‌இல்ல... கடுப்பாக இருந்ததா‌ விஜய் ஆண்டனி‌ கச்சேரி...? - ரசிகர்கள் ரியாக்சன்!

அதிகமாக விறக்ப்பட்ட டிக்கெட்டுகள்..? 

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இருக்கும் இறுக்கைகள் மற்றும் இடத்தை தாண்டி அதிகமான அளவிற்கு டிக்கெட்டுகளை விற்றுள்ளதாக ஒரு பக்கம் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கழிப்பறை வசதி இல்லை எனவும், பெண்களை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒருவர், “என் மகன் இன்னும் இரண்டு நிமிடங்கள் அங்கே நின்றிருந்தால் மிதித்தே கொண்டிருப்பார்கள்..” என்று குறிப்பிட்டிருந்தார். சிலர், குழந்தைகள் காணாமல் போனதாகவும் கூறினர். 

புகார் கொடுக்கப்படுமா..?

ஒரு டிக்கெட்டிற்கு 5,000-10,000 வரை செலவு செய்தவர்களுக்கும் நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிலர் X தளத்தில் குமுறல்களை தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு ரிப்ளை செய்திருக்கும் சிலர் இதை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது புகார் கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News