அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட்

Zee Tamil Anna Serial Today's Episode Update: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2024, 10:39 AM IST
  • தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • சௌந்தரபாண்டி சண்முகத்தை ஊரை விட்டே துரத்த முடிவெடுக்கிறார்.
அண்ணா சீரியல்: சாமி வந்து ஆடி சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பரணி.. கோவிலில் நடந்த ட்விஸ்ட் title=

Zee Tamil Anna Serial Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கனி சொன்ன விஷயத்தை கேட்டு கோபமாக கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் (Anna Serial Update) அதாவது, சௌந்தரபாண்டி ஏற்கனேவே கோவிந்தனை வைத்து எதோ திட்டத்தை தீட்டி வைத்திருக்க இங்கு வந்த பரணி திடீரென சாமி வந்தது போல் ஆடுகிறாள். கோவிந்தனை பார்த்து நீ இன்னைக்கு குடிக்க காசு தரலனு உன் பொண்டாட்டி காதை அறுத்துட்டு தானே வந்த என்று சொல்ல கோவிந்தன் என் வீட்டில நடந்ததை அப்படியே சொல்றியே மா என்று காலில் விழுந்து சரணடைகிறேன். 

இதனை தொடர்ந்து பரணி சௌந்தரபாண்டியை பார்த்து நீ நிறைய பாவம் பண்ணி இருக்க, உனக்கான அழிவு காலம் தொடங்கிருச்சு, நடக்க போற தர்மகத்தா தேர்தலில் உன்னை தோற்கடித்து எனக்கு தேவையானதை நானே உன்கிட்ட இருந்து எடுத்துக்குவேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி மிரண்டு போய் நிற்கிறார். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி

இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் குடும்பத்தினர் பரணிக்கு சாமி வந்தது பற்றி பேச பரணி இன்னைக்கு சொன்னது எல்லாம் அப்படியே நடக்கணும், அப்பாவை தர்மகத்தா தேர்தலில் ஜெயிக்க விட கூடாது என்று சொல்கிறாள், மறுபக்கம் சௌந்தரபாண்டி சண்முகத்தை ஊரை விட்டே துரத்த முடிவெடுக்கிறார். கந்து வட்டி காரனிடம் பணத்தை கொடுத்து வாங்கிய ஷண்முகம் வீட்டு பத்திரத்தை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு வர அவரை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News