கொரோனா இல்லை கொரோனா அறிகுறிகள்தான் - மணிரத்னம் தரப்பு விளக்கம்

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா இல்லை கொரோனா அறிகுறிகள்தான் இருக்கின்றன என தெரியவந்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 19, 2022, 01:53 PM IST
  • இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா என தகவல் வெளியானது
  • தற்போது அவருக்கு நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது
  • மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ல் ரிலீஸ்
கொரோனா இல்லை கொரோனா அறிகுறிகள்தான் - மணிரத்னம் தரப்பு விளக்கம் title=

கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுதலையாகி இருந்த உலகம் தற்போது மீண்டும் கொரோனாவின் பிடிக்குள் சிக்க ஆரம்பித்திருக்கிறது. உலகளவில் வேகமெடுத்திருக்கும் கொரோனா பரவல் தமிழ்நாட்டிலும் அதிகளவு இருக்கிறது. இதனால் மக்கள் தக்க முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

முதலமைசச்ர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்தச் சூழலில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக இன்று தகவல் வெளியானது.

Mani Ratnam

மேலும் தொற்றின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க | மனிதர்கள் இல்லை.. அனிமேஷன் காட்சிகள் இல்லை.. பார்த்திபனின் அடுத்த புது முயற்சி?

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. கொரோனா அறிகுறிகள் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டதில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது என அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

மேலும் படிக்க | அந்தப் பழக்கத்தை அம்மா நிறுத்தினார் நான் ஆரம்பித்துவிட்டேன்- ஸ்ரீதேவி மகள் ஓபன் டாக்

Ponniyin Selvan

முன்னதாக மணிரத்னம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்தினத்தை பிடித்த கொரோனா

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது. லைகா தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அது ஒரு கெட்ட கனவு... நடிகையை ஏமாற்றிய திரௌபதி இயக்குநர் - நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News