'புஷ்பா-2' படத்திலிருந்து விலகிய பஹத் பாசில்? விஜய் சேதுபதி தான் காரணமா?

விஜய் சேதுபதியை 'புஷ்பா-2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சுகுமார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2022, 12:29 PM IST
  • புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு வேலை நடந்து வருகிறது.
  • இப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
'புஷ்பா-2' படத்திலிருந்து விலகிய பஹத் பாசில்? விஜய் சேதுபதி தான் காரணமா? title=

'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான இந்த படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது.  படத்தின் இரண்டாம் பாகம் வெளிநாடுகளில் படமாக்க பட இருப்பதாக முன்னர் சில செய்திகள் வெளியானது.  புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் பஹத் பாசில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார், இவரது நடிப்பை அதிகம் பாராட்டை பெற்றது.  ஆனால் இவர் தற்போது உருவாகப்போகும் புஷ்பா-2 படத்தில் இருந்து விலகியதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | வாரிசு படத்தின் கதை இது இல்ல பாஸ்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

இவர் இந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் விஜய் சேதுபதி தான் என்று சில செய்திகள் கூறப்படுகிறது.  தென்னிந்திய திரையுலகில் படுபிஸியான நடிகர்களாக பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இருந்து வருகின்றனர் என்பது மறுக்க இயலாத உண்மை. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றிருந்தனர்.  இந்நிலையில் விஜய் சேதுபதியை முக்கியமான கதாபாத்திரத்தில் 'புஷ்பா-2' படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சுகுமார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டதாகவும், இதனை அறிந்த பஹத் பாசில் இந்த திட்டத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

fakath

ஆனால் சில தகவல்களின்படி, இந்த படத்திற்காக 100 நாட்களை பஹத் பாசில் ஒதுக்கியுள்ளதாகவும், படத்திற்காக மொட்டை அடித்து இருக்கிறார், இந்த படத்தில் தனக்கான காட்சிகளை நடித்து முடிக்கும் வரை வேறு படத்தில் ஒப்பந்தமாகாமல் காத்துகொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  அதே சமயம் 'புஷ்பா' படத்தில் முதலில் பஹத் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாகவும், சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.  மேலும் 'புஷ்பா-2' படத்தில் ஒரு முன்னணி பாலிவுட் நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்யபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News