திருமணமான ஹன்சிகா வீட்டில் வந்திறங்கிய பேரிடி: டைவர்ஸூக்கு விண்ணப்பம்

நடிகை ஹன்சிகா அண்மையில் திருமணம் முடித்த நிலையில் அவரது வீட்டில் இப்போது டைவர்ஸ் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2022, 03:21 PM IST
  • ஹன்சிகா மோத்வானி வீட்டில் விவாகரத்து
  • மனைவியை பிரிகிறார் அவரின் சகோதரர்
  • சகோதரரின் மனைவி முக முடக்கத்தால் பாதிப்பு
திருமணமான ஹன்சிகா வீட்டில் வந்திறங்கிய பேரிடி: டைவர்ஸூக்கு விண்ணப்பம் title=

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடிகை ஹன்சிகாவுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழா சினிமா வட்டாரத்தில் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஹன்சிகாவின் திருமண விழாவில் தெனிந்தியா மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு, நட்சத்திர தம்பதியை வாழ்த்தினர். இந்நிலையில், அவர்களது வீட்டில் திருமணம் முடிந்த பத்தே நாட்களில் டைவர்ஸ் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஹன்சிகா சகோதரர் விவாகரத்து

ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விவகாரத்து முடிவுக்கு சென்றுள்ளார். பிரசாந்த் மோத்வானிக்கும், அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் இடையே அண்மைக்காலமாக சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது விவாகரத்து முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் இருந்து தன்னுடைய திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார். 

மேலும் படிக்க | Poonam Bajwa: 7ஆம் வகுப்பு மாணவனின் லீலை..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர்

பிரசாந்த் மோத்வானி திருமணம்

பிரசாந்த் மோத்வானி முஸ்கான் நான்சியை 2021 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இதற்கான காரணம் அண்மையில் தெரியவந்தது. அதாவது, பிராசந்த் மோத்வானியின் மனைவி முஸ்கானுக்கு பெல்ஸ் பால்ஸி நோய் (முக முடக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருடைய முக அம்சங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் பதிவிட்ட அவர், கடினமான காலத்தில் தனது பெற்றோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அந்த பதிவில் அவருடைய கணவர் பிரசாந்த் மோத்வானி குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அந்த பதிவில் முக முடக்கத்தால் தனக்கு ஏற்பட்ட வலிகளையும் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினிக்காக 7 நாட்கள் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீதேவி! சுவாரஸ்ய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News