காந்தாரா ஓடிடி ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

காந்தாரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 23, 2022, 05:15 PM IST
  • காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
  • ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்
  • அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 காந்தாரா ஓடிடி ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது title=

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காந்தாரா. செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்னையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்யும் படமாக காந்தாரா வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர், சப்தமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படத்தை  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட போவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி காந்தாரா தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியானது. படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்பை படத்துக்கு கொடுத்தனர். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பிரமிப்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்தனர்\. மேலும், நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தாரர்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து எழுதியிருக்கும் திரைக்கதையையும் பலர் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் காந்தாரா படம் ஓடிடியில் எப்போது வெளியாகுமென்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்தது. தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (நவம்பர் 24) வெளியாகவிருக்கிறது. இதுகுறித்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் ரிஷப் ஷெட்டி சந்தித்து பேசி ஆசி பெற்றுக்கொண்டார். நீண்ட நேரம் ரிஷப்புடன் உரையாடிய ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த படம் காந்தாரா என்று புகழ்ந்தார். அதேபோல், காந்தாரா திரைப்படத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தாரா சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | வாரிசை வாங்கிவிட்டாரா உதயநிதி?... விஜய்யின் சூப்பர் மூவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News