கார்த்திகை தீபம்: கார்த்தியை திசை திருப்பிய சிதம்பரம்.. தோல்வியில் முடிந்த தீபா பிளான்

Karthigai Deepam Today: திரும்பவும் கார்த்திக்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிறான்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2023, 01:14 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
  • கார்த்தியை திசை திருப்பிய சிதம்பரம்..
  • தோல்வியில் முடிந்த தீபா பிளான்
கார்த்திகை தீபம்: கார்த்தியை திசை திருப்பிய சிதம்பரம்.. தோல்வியில் முடிந்த தீபா பிளான் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சர்வீஸ் விட்டிருந்த காரை எடுக்க சென்றிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, யாரோ ஒருவர் அருணாசலத்தின் போனை கொள்ளையடித்து கொண்டு ஓட அருணாச்சலம், அவருடன் இருந் மூன்று பேரும் துரத்தி செல்கின்றனர். ஒரு இடத்தில போய் ஒளியும் அந்த நபர் கார்த்திக்கு போன் செய்து இங்க ஒரு பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறார், அவருடைய போனில் உங்க நம்பர் இருந்ததாக சொல்லி பேசி கார்த்திக் அப்பாவுக்கு ஆபத்து என நினைத்து கிளம்பி செல்கிறான். 

மேலும் படிக்க | ரஜினி கோயிலில் நாககிரீடம் அமைத்து சிறப்பு வழிபாடு செய்த ரசிகர்....!

வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க அபிராமி கார்த்திக் குறித்து விசாரிக்க ஐஸ்வர்யா வேலை விஷயமாக போய் இருப்பாரு என்று சமாளிக்க முயற்சிக்க அருண் கார்த்திக்கு போன் போட முதலில் பிசி என வருகிறது. திரும்பவும் கார்த்திக்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிறான். மேலும் பூஜையை தொடங்குங்க நான் வந்து ஜாயின் செய்து கொள்கிறேன் என்று போனை வைத்து விட்டு பதற்றமாக செல்கிறான். 

அடுத்து வீட்டில் பூஜை தொடங்க தீபா இவ பாடுவதை ரெக்கார்ட் செய்து கார்திக்க்கிடம் கொடுக்கலாம் என்று யோசித்து மீனாட்சியிடம் சொல்ல அவள் நான் போய் போனை எடுத்து வரேன் என்று கிளம்ப அபிராமி எங்க போறீங்க? பூஜை முடியும் வரை எங்கயும் போக கூடாது என தடுத்து நிறுத்தி விடுகிறாள். மறுபக்கம் போனை திருடி சென்றவன் அதை திரும்பவும் அருணாச்சலம் அருகே வீசி விட்டு செல்ல அவர் கார்த்திக்கு போன் செய்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் பாதுகாப்பாக தான் இருக்கேன் என சொல்ல கார்த்திக் குழப்பம் அடைகிறான். 

இந்த நேரம் பார்த்து சிதம்பரம் போன் செய்து அருணாச்சலம் பற்றி விசாரிக்க இவை அனைத்தும் இவருடைய வேலை தான் என்பது தெரிய வருகிறது. பிறகு கார்த்திக் வீட்டிற்குள் நுழைய பல்லவி பாடி முடிக்க அபிராமி பாட்டு நல்லா இருந்ததாக பாராட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News