காணாமல் போகும் மீனாட்சி-சக்தி எடுத்த முடிவு என்ன..? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்..!

Meenakshi Ponnunga Episode Update Today: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jul 20, 2023, 11:59 AM IST
  • சக்தி நேர்முகத்தேர்வுக்கு செல்கிறாள்.
  • மீனாட்சி காணாமல் போன விஷயத்தை கேட்டு எழுந்து வந்துவிடுகிறாள்.
  • அடுத்து என்ன நடந்தது..? முழு விவரம்.
காணாமல் போகும் மீனாட்சி-சக்தி எடுத்த முடிவு என்ன..? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்..! title=

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்த சம்பவங்கள்:

மீனாட்சி பொண்ணுங்க தொடர், ஆரம்பித்த போது எவ்வளவு விறுவிறுப்பாக எடுத்துச்செல்லப்பட்டதோ இப்போது வரை அந்த விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. முன்னதாக தொடரின் முக்கிய கதாப்பாத்திரமான மீனாட்சி இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீண்டும் உயிருடன் வந்தது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியது. வெற்றி-சக்தி இடையே அவ்வப்போது ரொமான்சும் நடந்து வருகிறது. இருவரும் வெளியில் அடித்துக்கொண்டாலும் மனதிற்குள் காதலோடு உள்ளனர். இன்றைய எபிசோடில் ஷக்தி ஒரு விபரீதமான முடிவை எடுக்கிறாள். அதை தடுக்க வெற்றி என்ன செய்தான்? 

மேலும் படிக்க | மணமேடையில் விஜய், ஐஸ்வர்யா! சண்டக்கோழி சீரியல் அப்டேட்!

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் யமுனா சக்திக்கு போன் செய்து அம்மா காணவில்லை என்ற விஷயத்தை சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

இன்றைய எபிசோடில் நடக்க இருக்கும் சம்பவங்கள்:

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில், அம்மா காணவில்லை என்று யமுனா சொன்னதை யோசித்தவாறு சக்தி இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு செல்ல அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சக்தி எழுந்து வெளியே போகிறாள். இப்படி வெளியே வந்த சக்தி வெற்றியிடம் சொல்லாமல் வீட்டிற்க்கு போய் விடுகிறாள். 

அடுத்ததாக சத்தி யமுனாவை சென்று சந்திக்க, அங்கே வந்த வெற்றி அவர்களை திட்டி, மீனாட்சியம்மா மௌன விரதம் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்கிறான்.

சக்தி மீனாட்சியிடம் சென்று பேச, மீனாட்சி மௌன விரதம் கலைத்து ஐஏஎஸ் நேர்முகத் தேர்வு நல்ல முறையில் நீ முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மௌன விரதம் இருந்தேன் என்று சொல்ல, சக்தி மீனாட்சி சொன்னதைக் கேட்டு திகைத்து நிற்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தங்கைகளுக்கு சண்முகம் சொன்ன குட் நியூஸ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News