வெற்றி திருமணத்தில் சிக்கல்..சாந்தாவுக்கு ஷாக்..மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.   

Written by - Yuvashree | Last Updated : May 6, 2023, 11:18 AM IST
  • வெற்றியின் திருமணத்தில் சாந்தா மூலமாக சிக்கல் வருகிறது.
  • பூஜாவின் கேலிக்களை பொருத்துக் கொண்டு ஷக்தி சாந்தமாக நிற்கிறாள்.
  • இன்றைய எபிசோட் பலவிதமான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாக உள்ளது.
வெற்றி திருமணத்தில் சிக்கல்..சாந்தாவுக்கு ஷாக்..மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்! title=

தமிழ் சீரியல்களுள் பிரபலமான ஒன்றாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடர் பல ஆயிரம் குடும்பத்தாரின் மனங்களை கவர்ந்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த மீனாட்சியின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியல், பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை பார்க்கலாம் வாங்க. 

முந்தைய எபிசோட்…

கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்டுகிறான். தாலி ஏறியதும் பூஜா மேடையை விட்டு இறங்கி வந்து சக்தியை இனி நீ இருக்க வேண்டாம் கிளம்பி விடு என்று அவமானப்படுத்துகிறாள்.  இதுதான் சரியான நேரம் என சக்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விட்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே துரத்துகிறாள் பூஜா. இதைப் பார்த்ததும் செல்வ முருகனுக்கு வலிப்பு வந்து விழுகிறார். இது எல்லாம் சரண்யாவின் கனவு என தெரிகிறது. 

மேலும் படிக்க | மதுமிதாவை மயக்கிய மகா.. சீதா கொடுத்த ஷாக் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!

இனி நடக்கவிருப்பது..

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யா சக்தியிடம் நீ கர்ப்பம் இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடு என்று சொல்ல சக்தி வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான் என்று பிடிவாதமாக இருக்கிறாள். 

பின் ரங்கநாயகி சக்தியை கூப்பிட்டு தாலியை எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்ல சக்தி தாலியை எல்லோரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறாள். பிறகு கல்யாணத்துக்கு வந்திருந்த பெண்கள் சக்தியிடம் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார்கள். பூஜா நீ எனக்கு ஆசீர்வாதம் பண்ணு என்று சக்தியிடம் கிண்டலாக சொல்கிறாள். சக்தி அமைதியாக நிற்கிறாள். 

திருமணம் நடந்ததா? 

பிறகு ரங்கநாயகி வெற்றியிடம் தாலியை கட்டுமாறு கூற, கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி தாலியுடன் இருக்க, திடீரென அங்கே வந்த சாந்தா கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்ல, ரங்கநாயகி நீ யாரு என்று கேட்க சக்தி மெஸ்ஸில் வேலை செய்கிறவர் எனக்கு அக்கா மாதிரி என்று சொல்ல, சாந்தா ரங்கநாயகியிடம் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் இது சக்தியின் வாழ்க்கை என்று ஆவேசமாக சண்டையிட்டு பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Meenakshi Ponnunga

அடுத்து மண்டபத்திற்கு வெளியே நீதிமணி யமுனா துர்காவும் வர அவர்களைப் பார்த்துவிட்டு சங்கிலி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் என்று கேட்டு, மீனாட்சி குடும்பத்திற்கு உதவி செய்து இந்த கல்யாணத்தை நிறுத்த வந்தாயா? என்று சங்கிலி நீதிமணியை மிரட்டி கழுத்தை பிடிக்கிறான். 

மேலும் யாரும் மண்டபத்துக்கு உள்ளே போகக்கூடாது என மிரட்டுகிறான். யமுனாவும் துர்காவும் வேறு வழியில் மண்டபத்திற்குள் சென்று கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறார்கள். 

ட்விஸ்டுகளை மிஸ் பண்ணாதீங்க..

இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க் சீரியலில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 24 Movie: விக்ரம் நிராகரித்த கதையை தேர்ந்தெடுத்த சூர்யா..24 படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு!

Trending News