நானே வருவேன் கதை தனுஷ் எழுதியதா? உண்மையை கூறிய செல்வராகவன்!

நானே வருவேன் படத்தில் தனுஷும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் இருவரின் நீண்ட நாள் கனவு என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2022, 07:35 AM IST
  • நானே வருவேன் படம் சமீபத்தில் வெளியானது.
  • பல கலவையான விமர்சனங்களை பெற்றது.
  • இருப்பினும் நல்ல வசூலை பெற்றுள்ளது.
நானே வருவேன் கதை தனுஷ் எழுதியதா? உண்மையை கூறிய செல்வராகவன்! title=

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.  தனுஷின் சகோதரரும், இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருந்த 'நானே வருவேன்' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய கலவையான விமர்சனத்தை பெற்றது.  காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.  நிறைய சஸ்பென்ஸ் மற்றும் மர்மங்கள் நிறைந்த பிரிந்து போன இரண்டு சகோதரர்களை பற்றிய கதை தான் இந்த படம்.

nv

மேலும் படிக்க | ஆதிபுரூஷ் டீசர் ட்ரோல்களால் நொறுங்கிப்போனேன்; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த இயக்குநர்

சைகோட்டிக் த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், ஏற்கனவே கொடி மற்றும் பட்டாஸ் போன்ற படங்களில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தில் எல்லி அவ்ராம், இந்துஜா ரவிச்சந்தர், யோகி பாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.  கடந்த செப்டம்பர் 29ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் பற்றி இயக்குனர் செல்வராகவன் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், 'நானே வருவேன்' படத்தின் கதையை தனது சகோதரர் தனுஷ் தான் எழுதியாக செல்வராகவன் கூறியுள்ளார்.  மேலும், தனது சகோதரன் எழுதிய இந்த கதையை இயக்க வேண்டுமென்பது தன்னுடைய மிகப்பெரிய கனவு என்றும் இந்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் இருவரின் நீண்ட நாள் கனவு என்றும் அந்த கனவு தற்போது சரியான நேரத்தில் நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா! விவாகரத்துக்கு முற்று புள்ளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News