பிரபாஸ்க்கு நன்றி கூறிய எஸ்.எஸ்.ராஜமௌலி!!

Last Updated : Jan 6, 2017, 06:07 PM IST
பிரபாஸ்க்கு நன்றி கூறிய எஸ்.எஸ்.ராஜமௌலி!! title=

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டமாக வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம், நடிகர் பிரபாஸ் உட்பட அப்படத்தின் நடிகர்கள் உலகளவில் பிரபலமடைந்தனர். 

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி 'பாகுபலி' படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பிரபாஸ் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக முழு ஈடுபாட்டுடன் தனது சிறந்த 
நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

டுவிட்டரில் அவர் கூறியதாவது: இன்றுடன் பிரபாஸ் படப்பிடிப்பு நிறைவுற்றது. 3.5 ஆண்டுகள் முடிந்தன. நன்றி டார்லிங். மற்றவர்களைக் காட்டிலும் இந்த படத்தின் மீது உனக்கு இருந்த நம்பிக்கை அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Trending News