காவாலா பாட்டில் ரஜினி கிடையாதா?.. வெளியான அதிர்ச்சி அப்டேட்

தற்போது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஜெயிலர் படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2023, 06:21 PM IST
  • தமன்னாவின் நடனத்தில் வெளிவந்த இப்பாடலின் பெயர் ‘காவாலா’
  • இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 .
  • இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது
காவாலா பாட்டில் ரஜினி கிடையாதா?.. வெளியான அதிர்ச்சி அப்டேட் title=

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்: அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம்  'ஜெயிலர்' இந்த  திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

ஜெயிலர் படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகை தமன்னாவும் ஜோடியாக நடிக்கிறார். இது, அவருக்கு நடிகர் ரஜினியுடனான முதல் படமாகும். மேலும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடக்க உள்ளதால் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

அந்த வகையில் கடந்த 6 ஆம் தேதி அன்று, இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடல் வெளியானது. இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுவரை  தமிழ் படங்களில் தனது இடுப்பை தவிர வேறு எந்த பாகத்தையும் காட்டாமல் நடித்து வந்த அவர், ‘காவாலா’ பாடலில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கவர்ச்சி காண்பித்திருக்கிறார். இந்த பாடலில் அவ்வப்போது நடனமாடும் ரஜினியை ‘ஓரமா போ தலைவா..தமன்னாவை பாக்கனும்..’ என்று கமெண்டுகளில் கலாய்த்துள்ளனர் ரசிகர்கள். தமன்னாவின் இந்த மாற்றம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’தன்னிடம் பாட்டு எழுத கூறும் போது தமன்னாவுக்கு மட்டும் தான் பாட்டு எழுத வேண்டும் என்று கூறியதாகவும், ரஜினிகாந்த் இந்த பாடலில் தோன்றியது குறித்து என்னிடம் தெரிவிக்கவே இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த பாடலை பார்த்தபோதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் பணிகளை முடித்தவுடன் அவர் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். முன்னதாக இதற்கான போட்டோஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியானது , மேலும் இது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பிரபல நடிகையின் காதல் கணவர் மீது பண மோசடி வழக்குப்பதிவு…!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News